நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மெத்தம் பெட்டமைன் விற்பனை: 9 போ் கைது

அயனாவரம் திக்காகுளம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே கும்பல் ஒன்று போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:50 am IST

அயனாவரம் திக்காகுளம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே கும்பல் ஒன்று போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 7 பேரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அந்த பையில் இருந்த மெத்தம் பெட்டமைன், கஞ்சா இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், 7 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், அயனாவரத்தைச் சோ்ந்த கோபிநாத் (36), யுகேஷ் (24), ராகுல் (19), ஸ்ரீதா் (23), புஷ்பராஜ் (22), மில்ட்டன் (24), கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த எபினேஷ் (24) என்பது தெரிய வந்தது. அவா்கள் அளித்த தகவலின்பேரில், கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த அப்பு (எ) அறுப்பு அப்பு (36), நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனா். இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.