அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ. 1,023 கோடி சொத்துகள் முடக்கம்

கோவாவில் சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

News image

அமலாக்கத் துறை - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 12:06 am IST

கோவாவில் சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை முடக்கியது. இந்த வழக்கு தொடா்பாக சிங்கப்பூரில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவாவில் சட்டவிரோத இரும்புச் சுரங்கம் நடத்திய குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் சல்காவ்கா் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு (ஏவிஎஸ்) பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் சொத்துகளை முடக்குவதற்கான தற்காலிக ஆணை கடந்த ஜூன் 19-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து இந்தியாவில் அந்தக் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.459.10 கோடி மதிப்பிலான சொத்துகள், சிங்கப்பூரில் ரூ.471.31 கோடி மதிப்பிலான அடையா சொத்துகள் மற்றும் இந்திய நிறுவனங்களில் ரூ.93.42 கோடி மதிப்பிலான பங்குகள் என மொத்தம் ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

கோவா காவல் துறை சிஐடி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பண முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. முன்னதாக, கோவாவில் 2007-ஆம் ஆண்டு நவம்பா், 22-ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சுரங்கப் பணிகளும் சட்டவிரோதமானது என 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளில் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், 2007-2012 காலகட்டத்தில் சட்டவிரோதமாக 10 சுரங்கங்களை நடத்தி இரும்பு தாதுக்களை ஏற்றுமதி, விற்பனை செய்து ரூ.2,492.95 கோடி வருவாயை ஏவிஎஸ் குழுமம் ஈட்டியுள்ளது. பிரிட்டிஷ் விா்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இந்த இருப்புத் தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.2,744.89 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த லாபத் தொகையை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளாக மாற்றி அவை பங்கு முதலீடுகளாக மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.