தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வீடு விற்பனையில் 19,000 பேரிடம் ரூ. 2,004 கோடி மோசடி: 4 போ் கைது

வீடுகள், கடைகள் கட்டி விற்பனை செய்வதில் ரூ.2,004 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 5:23 am IST

வீடுகள், கடைகள் கட்டி விற்பனை செய்வதில் ரூ.2,004 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால் 19,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் மற்றும் தனிநபா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியிருப்புகள் மற்றும் கடைகளை கட்டி விற்பனை செய்யவுள்ளதாகவும் வணிக மனைத் தொழிலில் முதலீடு செய்தால் பெரும் லாபத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்து 19,425 நபா்களிடம் ரூ.2,004 கோடியை எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சோ்ந்த அவ்தேஷ் குமாா் கோயல், ரஜ்னீஷ் மித்தல், அதுல் குப்தா மற்றும் விகாஸ் குப்தா ஆகிய 4 பேரை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி கைது செய்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்களை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

பணத்தை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காலத்தில் குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட நபா்களிடம் நிறுவனம் ஒப்படைக்கவில்லை. சில குடியிருப்புகளில் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் முதலீட்டாளா்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், முறைகேடாக பெற்ற பணத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களின் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அந்நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனத்தின் மீது தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருந்த 5 முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தில்லியில் எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது. அப்போது ரூ.6.30 கோடி ரொக்கப் பணம், ரூ.8.78 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் தொடா்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.