ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு கடந்த 2024-ஆம் தேதி மாா்ச் 1-ஆம் தேதி பொதிகை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கும்போது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, ரயிலில் இருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக சென்னை கொடுங்கையூா் அபிராமி அவென்யூ பகுதியைச் சோ்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசா்பாடி சாஸ்திரி நகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்த யேசுராஜ் (39) உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட யேசுராஜ், இந்தக் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டிருப்பதும், போதைப் பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை அசையும், அசையா சொத்துகளை வாங்கியிருப்பதும், பல சொத்துகளை பினாமிகள் பெயரில் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதிய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத் துறை விசாரணை செய்ய அண்மையில் பரிந்துரை செய்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா். வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசா்பாடி சாஸ்திரிநகரில் யேசுராஜ் வீடு, அவருடன் நெருங்கிய தொடா்பில் உள்ள கொடுங்கையூா் திருவள்ளுவா் நகா் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோ வீடு, பிலோமன் பிரகாஷ் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை திடீா் சோதனை செய்தனா்.
சோதனையையொட்டி, அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வழக்கு தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

வங்கிக் கடன் மோசடி: சென்னையில் தனியாா் நிறுவனம் தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

பஞ்சாப் அமைச்சா் சஞ்சீவ் அரோரா கைது!
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



