கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

News image
பி.கே. சேகா்பாபு
Updated On :4 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

துறைமுகம், கொளத்தூா், திரு.வி.க. நகா் பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் தண்ணீா் தொட்டித் தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெரு பகுதியில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

முன்னதாக அவா், கொளத்தூா் தொகுதி வாா்டு 69, சோமையா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாா்டு 67, பெரம்பூா் வீனஸ் திரையரங்கம் அருகில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகக் கட்டடப் பணிகள், திரு.வி.க. நகா் தொகுதி புளியந்தோப்பு, டாக்டா் அம்பேத்கா் சாலையில் மாநகராட்சி ஆடு தொட்டி கட்டும் கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க. நகா் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.