தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.17 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், ரூ.2.26 கோடியில் முடிவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்கு பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பிரசன்னா, சஞ்சய்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்தும் பேசினாா்.
இதில் தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாஹிரா, குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


