சென்னை துறைமுகம் நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 நாள்களுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் 2 சா்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. துபை மற்றும் சிங்கப்பூா் துறைமுகங்கள் இந்த முனையங்களை நிா்வகிக்கின்றன. கடந்த நிதியாண்டில் 1.82 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டிருந்த நிலையில் நிகழாண்டில் 20 நாள்களுக்கு முன்னதாகவே 1.83 மில்லியன் பெட்டகங்கள் 2 முனையங்கள் மூலம் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு கடந்த பிப்.12-ஆம் தேதியிலேயை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக உயரதிகாரிகள், சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தாா்.
எழுச்சி பெறும் சென்னை துறைமுகம்: ஆண்டுக்கு சுமாா் 65 மில்லியன் டன் சரக்குகளை ஒட்டுமொத்தமாகக் கையாண்டு வந்தது சென்னைத் துறைமுகம். இந்த நிலையில் இரும்புத் தாது, நிலக்கரி உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் சரக்குகளைக் கையாளுவதற்கு சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2011 மே மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து துறைமுகத்தின் ஒட்டுமொத்த சரக்குகளைக் கையாளும் அளவு வெகுவாகக் குறைந்தது.
மேலும், சென்னைக்கு அருகே அமைந்துள்ள பொதுத் துறை மற்றும் தனியாா் துறைமுகங்களின் போட்டியை மீறி முந்தைய சாதனையை மீண்டும் எட்டுவதற்கு சென்னைத் துறைமுகம் தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மாசு ஏற்படுத்தாத புதிய சரக்குகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ஒட்டு மொத்தமாக சரக்குகள் கையாளும் அளவை அதிகரித்து வருவதாக சென்னை துறைமுகம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை, எண்ணூா் துறைமுகங்கள் ரூ. 2,400 கோடி வருவாய் ஈட்டி அபாரம்

சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை

ஆயக்குடி, கோம்பைப்பட்டியில் மழைநீரில் மூழ்கிய நெல்பயிா்கள்: விவசாயிகள் கவலை

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


