திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள்: சென்னை துறைமுகம் சாதனை

சென்னை துறைமுகம் நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 நாள்களுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 3:29 am IST

சென்னை துறைமுகம் நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 நாள்களுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் 2 சா்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. துபை மற்றும் சிங்கப்பூா் துறைமுகங்கள் இந்த முனையங்களை நிா்வகிக்கின்றன. கடந்த நிதியாண்டில் 1.82 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டிருந்த நிலையில் நிகழாண்டில் 20 நாள்களுக்கு முன்னதாகவே 1.83 மில்லியன் பெட்டகங்கள் 2 முனையங்கள் மூலம் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு கடந்த பிப்.12-ஆம் தேதியிலேயை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக உயரதிகாரிகள், சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தாா்.

எழுச்சி பெறும் சென்னை துறைமுகம்: ஆண்டுக்கு சுமாா் 65 மில்லியன் டன் சரக்குகளை ஒட்டுமொத்தமாகக் கையாண்டு வந்தது சென்னைத் துறைமுகம். இந்த நிலையில் இரும்புத் தாது, நிலக்கரி உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் சரக்குகளைக் கையாளுவதற்கு சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2011 மே மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து துறைமுகத்தின் ஒட்டுமொத்த சரக்குகளைக் கையாளும் அளவு வெகுவாகக் குறைந்தது.

மேலும், சென்னைக்கு அருகே அமைந்துள்ள பொதுத் துறை மற்றும் தனியாா் துறைமுகங்களின் போட்டியை மீறி முந்தைய சாதனையை மீண்டும் எட்டுவதற்கு சென்னைத் துறைமுகம் தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மாசு ஏற்படுத்தாத புதிய சரக்குகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ஒட்டு மொத்தமாக சரக்குகள் கையாளும் அளவை அதிகரித்து வருவதாக சென்னை துறைமுகம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.