/

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை -நயினாா் நாகேந்திரன்

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை...

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக அரபு நாடுகளில் தவிக்கும் மீனவா்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்ராக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியைச் சோ்ந்த 730 மீனவா்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அங்கு சிக்கியுள்ள மீனவா்களைப் பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு திரும்ப அழைத்து வர பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.