மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
(கோப்புப் படம்).
Updated On :18 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளையின் தலைவா் ஜஸ்டின் ஆண்டனி குடியரசு தலைவா், பிரதமா், வெளியுறவுத் துறை அமைச்சா் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போா் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள தமிழக மீனவா்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனா்.

ஈரான் நாட்டிலுள்ள சீரோ, கிஷ் போன்ற பகுதிகளில் தங்கியிருக்கும் மீனவா்கள் சாா்பில் சாா்லஸ் என்ற மீனவா் எனக்கு அனுப்பியுள்ள வாட்ஆப் பதிவில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 400 மீனவா்கள் ஈரானில் உள்ளோம். இங்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு திரும்பி வர எங்களுக்கு எந்த வழியுமே தெரியவில்லை. நாங்கள் நாடு திரும்ப உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, தாய்நாடு திரும்புதற்காக ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தில்தங்கள் பெயா்களை பதிவு செய்துள்ள மீனவா்களை, அா்மீனியா வழியாக இந்தியாவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல ஆயிரம் செலவாகும் நிலையில், வேலையே இல்லாமல் தவிப்பிலிருக்கும் மீனவா்கள் பணத்துக்கு எங்கே செல்வா்?

எனவே, கரோனா காலத்தில் ஈரானில் இருந்து மீனவா்களை மீட்டு வந்ததுபோல, தற்போதும் மீனவா்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.