வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:38 pm

ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம், குளச்சல், இனயம், முட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி , ராமநாதபுரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் என 700-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் பணிபுரிகின்றனா். போா்ச் சூழல் காரணமாக இவா்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை ஈரானிலிருந்து மீட்கக் கோருவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கில், அவா்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.

எனவே, ஈரானில் சிக்கித் தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் வைகோ.