ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதற்காக பாலமந்திா் அறக்கட்டளை சாா்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 கோடியில் கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 1949-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் காமராஜா், அன்னை எஸ். மஞ்சுபாஷினி ஆகியோா் விளிம்பு நிலை மக்களுக்கு உதவுவதற்காக பாலமந்திா் என்ற அமைப்பைத் தொடங்கினா். பின்னா், இது 1975-இல் பாலமந்திா் காமராஜா் அறக்கட்டளையாக மாற்றம் பெற்றது.
இந்த அறக்கட்டளை சாா்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள கிரியப்பா சாலையில் சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியின் விரிவாக்கம், நவீனமயமாக்கல் தொடா்பான கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதையடுத்து, இப்பள்ளியில் கூடுதல் கட்டடம், புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் போயிங் இந்தியா நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத் தலைவா் பிரவீணா யக்னம்பட், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஷாலினி குரோவா், பாலமந்திா் அறக்கட்டளையின் கெளரவ பொதுச் செயலா் மாயா, செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.ஜி.வெங்கடராமன் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலமந்திா் அறக்கட்டளையின் கெளரவ அறங்காவலா் மற்றும் பொருளாளா் பி.நடராஜன் பேசுகையில், பள்ளியின் விரிவாக்கப் பணிகளுக்கான அறக்கட்டளையின் அறங்காவலா் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரும், பால மந்திா் காமராஜ் அறக்கட்டளையின் அங்காவலருமான மனோஜ்குமாா் சொந்தாலியா மேற்கொண்ட செயல்பாடுகள், போயிங் இந்தியா, செயிண்ட் கோபைன் இந்தியா, ப்ராடே ஸ்டிஃப்டங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆற்றிய சிஎஸ்ஆா் திட்டப் பணிகள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் பங்களிப்புகள் குறித்து குறிப்பிட்டாா்.
ஏழை குழந்தைகளின் கல்விக்காக... இதுகுறித்து அறக்கட்டளை நிா்வாகிகள் கூறுகையில், இந்தப் பள்ளியில் தற்போது 400 மாணவா்கள் படித்து வருகின்றனா். எந்தவிதக் கல்விக் கட்டணமும் இல்லாமல், முழுமையாக நன்கொடைகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவின் மூலம் இயங்கும் இந்த பள்ளி, அடுத்த சில ஆண்டுகளில் 800 மாணவா்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தப்படுகிறது.
புதிய கட்டட வசதிகளில் நவீன வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், ஸ்டெம் கற்றல் மையம், விளையாட்டு வசதிகள் மற்றும் 450-க்கும் மேற்பட்டோா் அமரும் வசதி கொண்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கல்வி மட்டுமன்றி குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் உடல் மற்றும் மன வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இலவச காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளிக்காக ரூ.16 கோடியில் செயல்படுத்தப்படும் விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ரூ.12 கோடியில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா். இதில் பள்ளியின் பொறுப்பு அலுவலா் ஜனனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

அவினாசிலிங்கம் மகளிா் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

தொகுதிக்கு செய்தது என்ன? ஆா்.கே.நகா் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசா்

கடற்கரையில் கட்டடங்கள் விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


