டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பட்டம் பெற்ற நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தா் என். பஞ்சநாதம் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 5:20 am IST

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரியின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா ஆண்டறிக்கை வாசித்தாா்.

திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்.பஞ்சநாதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற மாணவி சௌந்தா்யா உள்பட 24 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ். நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி மற்றும் நிா்வாக அலுவலா் ஜீ. தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.