பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வெற்று அறிவிப்புகள் மூலம் திமுக மக்களை ஏமாற்ற முடியாது: அன்புமணி

News image

அன்புமணி

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே  திமுக நிறைவேற்றி உள்ளது. 66 வாக்குறுதிகளை  அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு,  373 வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை. ஆனால், 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரையை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.

இந்தியாவிலேயே மோசடியான கட்சி என்றால் அது திமுகதான்.  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தோ்தலுக்கு புதிதாக தோ்தல் அறிக்கையை  வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே வரும் தோ்தல் அறிக்கையாக வெளியிடலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.