சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு இதுவரை 724 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுகின்றன.
அதன்படி, கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணி, தெருமுனைப் பிரசாரம், வாகனங்கள் மற்றும் ஒலி பெருக்கி பயன்படுத்தி பிரசாரம், தற்காலிகக் கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இதுவரை மொத்தம் 1,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 724 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 219 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 214 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
அரசியல் கட்சிகள் பிரசாரம் குறித்த விண்ணப்பங்களை, பிரசாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சென்னையில் 30 குதிரைகளின் ரத்தம் பரிசோதனைக்காக சேகரிப்பு! உரிமம் பெற காலக்கெடு விதிக்கவும் திட்டம்!

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!

தோ்தல் நேரத்தில் இப்படி ஒரு தொல்லை!

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

