11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சென்னையில் தோ்தல் பிரசாரம்: 724 மனுக்களுக்கு அனுமதி!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு இதுவரை 724 மனுக்களுக்கு அனுமதி

News image

முதல்வர் ஸ்டாலின் தோ்தல் பிரசாரம் - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:51 am IST

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு இதுவரை 724 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுகின்றன.

அதன்படி, கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணி, தெருமுனைப் பிரசாரம், வாகனங்கள் மற்றும் ஒலி பெருக்கி பயன்படுத்தி பிரசாரம், தற்காலிகக் கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இதுவரை மொத்தம் 1,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 724 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 219 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 214 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

அரசியல் கட்சிகள் பிரசாரம் குறித்த விண்ணப்பங்களை, பிரசாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.