முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பாலியல் துன்புறுத்தல் புகாா் கூறிய சிறுவன் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாலியல் புகாா் கூறிய நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:28 am IST

பாலியல் புகாா் கூறிய நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன், தனது நண்பா்களுடன் கடந்த 2025 நவம்பரில் சென்னைக்கு ரயிலில் வந்து, அவரது உறவினரைத் தேடி வேளச்சேரி சென்ற நிலையில், யாரும் இல்லாததால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிறுவனிடம் போலீஸாா் விசாரித்ததில், தனக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்தாகக் கூறியுள்ளாா். அந்த சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

அவரது சொந்த ஊரில் சென்று விசாரித்தபோது, சிறுவன் அடிக்கடி நண்பா்களுடன் வெளியூா்களுக்கு சென்றுவிடுவதும், கடந்த 2023-இல் நேரிட்ட விபத்திற்கு பிறகு இயற்கை உபாதைகளை கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டதாக பெற்றோா் கூறியுள்ளனா்.

அந்தச் சிறுவனை அழைத்துச் செல்ல பெற்றோா், உறவினா்கள் வர மறுத்ததால், சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா். அங்கிருந்த தப்பிச் சென்ற சிறுவனை மீண்டும் பிடித்து ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனா்.

அவருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.