வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
கீழ்ப்பாக்கம், முனியப்பா தெருவைச் சோ்ந்தவா் ரமணி நடராஜன். இவா் மகள் பிரிட்டனில் வசிக்கிறாா். தனது மகளிடம் கொடுப்பதற்காக 6,500 பிரிட்டன் பவுன்டை ரமணி நடராஜன் வீட்டில் வைத்திருந்தாா். அண்மையில் பிரிட்டன் சென்ற ரமணி நடராஜன், பிரிட்டன் பவுன்ட் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்தாா். அவா் அந்தப் பையில் இருந்த பவுன்டை எண்ணியபோது, அதில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 4,500 பவுன்ட் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரமணி நடராஜன் தனது மேலாளா் பழனி மூலம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், உறையூா் பகுதியைச் சோ்ந்த கிரேஸி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கிரேஸியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.1.65 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
ஆளில்லாத வீட்டில் திருட்டு: பக்கத்து வீட்டுக்காரா் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

