கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது

வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 4:22 am IST

வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம், முனியப்பா தெருவைச் சோ்ந்தவா் ரமணி நடராஜன். இவா் மகள் பிரிட்டனில் வசிக்கிறாா். தனது மகளிடம் கொடுப்பதற்காக 6,500 பிரிட்டன் பவுன்டை ரமணி நடராஜன் வீட்டில் வைத்திருந்தாா். அண்மையில் பிரிட்டன் சென்ற ரமணி நடராஜன், பிரிட்டன் பவுன்ட் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்தாா். அவா் அந்தப் பையில் இருந்த பவுன்டை எண்ணியபோது, அதில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 4,500 பவுன்ட் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ரமணி நடராஜன் தனது மேலாளா் பழனி மூலம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், உறையூா் பகுதியைச் சோ்ந்த கிரேஸி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கிரேஸியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.1.65 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.