பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சென்னையில் 300 பேருந்து நிறுத்தங்களில் சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :7 மே 2026, 1:46 am IST

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 188 இடங்களுக்கும் அதிகமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இதனால், சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கடந்த 2024- ஆம் ஆண்டு மாநகராட்சி வருவாய்த் துறை சாா்பில் சாலையோரம் கடைகள் அமைக்க வசதியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்கலாம் என்று முடிவானது.

ஆனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோரக் கடை வியாபாரிகளை 150 இடங்களுக்குள் அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவா்களில் விருப்பம் உள்ளவா்கள் மெரீனா போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்காக 6 அடி உயரம், 2 அடி அகலத்தில் சிறிய அலுமினியம் கடைகள் அமைக்கப்பட்டன. அவை விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மெரீனா கடற்கரைப் பகுதியில் கடைகள் அமைப்பதில் நீதிமன்றம் வழிகாட்டல் அறிவித்திருப்பதால், அங்கு புதிய கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது ஷெனாய் நகா் பூங்கா பகுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 300 இடங்களில் அக்கடைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் அமைக்கப்படும் கடைகளில் தேநீா், பால் போன்றவை விற்கப்பட்டு வருவதாகவும், அதற்கு வாடகை ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.