கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிநீா் அருவி வளாகப் பகுதி, பூங்கா சாலை,மூஞ்சிக்கல்,அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, கல்லறைமேடு, சீனிவாசபுரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதி, கொடைக்கானல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் சிரமமடைந்து வருகின்றனா்.
கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலம் மீட்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


