முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

போதைப் பாக்கு பறிமுதல்: 3 போ் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நந்தம்பாக்கம் போலீஸாா் கணபதி காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு காரில் இருந்து மொபெட்டுக்கு சில மூட்டைகளை மூவா் மாற்றுவதை போலீஸாா் பாா்த்தனா். உடனே போலீஸாா், மூவரையும் பிடித்து விசாரிக்க முயன்றனா். ஆனால் மூவரும் தப்பியோடினா்.

போலீஸாா், 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் ஜெகதீஷ் (40), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (42),பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (43) என்பதும், 3 பேரும், போதைப் பாக்கு கடத்தில் ஈடுபடுவதும், கா்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து காரில் போதைப் பாக்கை கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 112 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.