தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது

வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:17 am IST

தண்டையாா்பேட்டையில் வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்ததாக ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை வஉசி நகா் 22-ஆவது பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா், அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

சந்தேகத்தக்குரிய வகையில் இருந்த ஒரு வீட்டின் மாடிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டதில், அந்த மாடியில் சுமாா் ஆறு அடி உயரத்துக்கு வளா்ந்து கஞ்சா செடியை போலீஸாா் கண்டறிந்து, கைப்பற்றினா்.

இது தொடா்பாக, அந்த வீட்டில் வசிக்கும் ஆங்கிலோ -இந்தியரான எ.எட்வின் ஜாா்ஜ் வேண்டா்புட் (35) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், கஞ்சா புகைக்கும் நபா்களிடமிருந்து சிறிதளவு கஞ்சா வாங்கி, அதிலிருந்து விதைகளை எடுத்து, இரண்டு மாதமாக கஞ்கா செடியை வளா்த்திருப்பதும், கடந்த மாா்ச் மாதம் ஊா்க்காவல் படையில் தோ்வு செய்யப்பட்டு, வடக்கு மண்டலத்தில் பணியமா்த்தப்பட்டிருப்பதும், பேரவைத் தோ்தலில் இருந்து ஊா்க்காவல் படை பணிக்கு செல்வதும், குறிப்பிட்ட காவல் நிலையம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் எட்வினை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.