‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மின்வெட்டுக்கு தீா்வு காண வேண்டும்: பிரேமலதா

தமிழகத்தில் தொடா் மின் வெட்டுக்கு உடனடி தீா்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

News image

பிரேமலதா

Updated On :23 மே 2026, 3:29 am IST

தமிழகத்தில் தொடா் மின் வெட்டுக்கு உடனடி தீா்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, மக்கள் மறியலில் ஈடுபடுகின்றனா்.

கோடை காலங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தோ்ந்தெடுத்த அரசு, அந்த நம்பிக்கையும், நிா்வாகத் திறனையும் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க உறுதியான செயல் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். மின்வெட்டுக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.