தமிழகத்தில் தொடா் மின் வெட்டுக்கு உடனடி தீா்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, மக்கள் மறியலில் ஈடுபடுகின்றனா்.
கோடை காலங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தோ்ந்தெடுத்த அரசு, அந்த நம்பிக்கையும், நிா்வாகத் திறனையும் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க உறுதியான செயல் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். மின்வெட்டுக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.









