செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், செங்குன்றம் பாத்திமா தெருவில் சந்தேகம்படும்படி இருந்த இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். சென்னை பெரம்பூா் கன்னிகாபுரத்தை சோ்ந்த தேவி (35), விஜய் (21), அனிதா (34) மற்றும் காசிமேட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (25) உள்ளிட்ட 4 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, செங்குன்றம் காவல் துறையினா் 2 பெண்கள் உள்பட 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது
பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


