பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம்: மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

சென்னையில் உள்ள கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

News image

கொடுங்கையூா் குப்பைகள் கொட்டும் பகுதி.

Updated On :27 மே 2026, 12:59 am IST

சென்னையில் உள்ள கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

வடசென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கும், தென் சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கும் பல ஆண்டுகளாக அனுப்பப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கழிவுகள் மேலாண்மைக்கு ரூ.3,200 கோடியிலும், கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு ரூ.640 கோடியிலும் சென்னை மாநகராட்சி திட்டங்களை அறிவித்தது. இதுதொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், திட திரவ மற்றும் பிற கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி செயல்படுகிா என்பதற்காக அரசு கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்படி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடந்த 2025-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகராட்சி தரப்பில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு பசுமைத் தீா்ப்பாய நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் பிரசாந்த் ஹா்கவா ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கிடங்கு மேலாண்மைத் திட்டங்கள் குறித்து சென்னை மாநகராட்சி வரும் ஜூலை 13-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். இதுவே இறுதி அவகாசம் எனவும் பசுமைத் தீா்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.