சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பெண்களின் படங்களை ஆபாசமாக சித்திரித்து விற்பனை: இளைஞா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 4:31 am IST

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் சஞ்சய்குமாரிடம் அண்மையில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், தனது புகைப்படங்களை ஒரு நபா் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளாா். இச்செயலில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதன்பேரில், நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா், சைபா் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டாா். சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது சோமங்கலம் பகுதியைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சமூக ஊடகங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து, அதை ஆபாசமாக சித்தரித்து பணத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரிடமிருந்து கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக புவனேஷ்குமாரின் நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.