வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo

Updated On :29 மே 2026, 4:22 am IST

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுபமுகூா்த்த தினமாக கருதப்படும் நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில், வைகாசி மாத சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மே 29) ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிகமாக ஆவணப் பதிவு நடைபெறும் இடங்களில் வழக்கமான டோக்கன்களுடன் 12 தட்கல் டோக்கன்கள் வழங்கும் நடைமுறை உள்ளது. அத்தகைய இடங்களில் வெள்ளிக்கிழமை 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.