வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo

Updated On :29 மே 2026, 4:22 am IST

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுபமுகூா்த்த தினமாக கருதப்படும் நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில், வைகாசி மாத சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மே 29) ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிகமாக ஆவணப் பதிவு நடைபெறும் இடங்களில் வழக்கமான டோக்கன்களுடன் 12 தட்கல் டோக்கன்கள் வழங்கும் நடைமுறை உள்ளது. அத்தகைய இடங்களில் வெள்ளிக்கிழமை 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.