கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo

Updated On :29 மே 2026, 4:22 am IST

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுபமுகூா்த்த தினமாக கருதப்படும் நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில், வைகாசி மாத சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மே 29) ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிகமாக ஆவணப் பதிவு நடைபெறும் இடங்களில் வழக்கமான டோக்கன்களுடன் 12 தட்கல் டோக்கன்கள் வழங்கும் நடைமுறை உள்ளது. அத்தகைய இடங்களில் வெள்ளிக்கிழமை 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.