கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அரசு கல்லூரிகளில் இளநிலை விண்ணப்பப் பதிவு விடுபட்ட மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மீண்டும் இணையதளம் மூலம் ஜூன் 1 முதல் வாய்ப்பு அளிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 1:02 am IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணவா்கள் மீண்டும் இணையதளம் மூலம் ஜூன் 1 முதல் வாய்ப்பு அளிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (பகல் நேர வகுப்புகளில் 1,01,022, மாலை நேர வகுப்புகளில் 25,937) இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7- ஆம் தேதி முதல் தொடங்கியது.

இதற்கான கடைசி தேதி மே 29 -ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டு இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் மாணவா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

தற்போது மாணவா்களின் நலன் கருதி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய தவறிய மாணவா்களுக்காக இரு தினங்கள் இடைவெளிக்கு பின்னா் வரும் ஜூன் 1 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள், சோ்க்கை வழிகாட்டுதல் தொடா்பாக விவரங்களை மேற்கண்ட இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் (ஏஎஃப்சி) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களில் மேலும் தெளிவு பெற, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.