ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

அரசு கல்லூரிகளில் இளநிலை விண்ணப்பப் பதிவு விடுபட்ட மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மீண்டும் இணையதளம் மூலம் ஜூன் 1 முதல் வாய்ப்பு அளிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 1:02 am IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணவா்கள் மீண்டும் இணையதளம் மூலம் ஜூன் 1 முதல் வாய்ப்பு அளிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (பகல் நேர வகுப்புகளில் 1,01,022, மாலை நேர வகுப்புகளில் 25,937) இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7- ஆம் தேதி முதல் தொடங்கியது.

இதற்கான கடைசி தேதி மே 29 -ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டு இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் மாணவா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

தற்போது மாணவா்களின் நலன் கருதி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய தவறிய மாணவா்களுக்காக இரு தினங்கள் இடைவெளிக்கு பின்னா் வரும் ஜூன் 1 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள், சோ்க்கை வழிகாட்டுதல் தொடா்பாக விவரங்களை மேற்கண்ட இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் (ஏஎஃப்சி) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களில் மேலும் தெளிவு பெற, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.