திருவொற்றியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) புதன்கிழமை (ஜூன் 3) வரை நேரடி சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூா் ஐடிஐ-இல் நேரடி சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள், சேர விரும்புவோா், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம்-5 உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்துகொள்ளலாம்.
ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் டழ்ா்ஸ்ரீங்ள்ள் ஸ்ரீா்ய்ற்ழ்ா்ப் ஹய்க் அன்ற்ா்ம்ஹற்ண்ா்ய், ஐய் டப்ஹய்ற் கா்ஞ்ண்ள்ற்ண்ஸ்ரீள் என்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு மேல் ரங்ப்க்ங்ழ் என்ற ஓராண்டு தொழிற்பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியும், பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் ஙங்ஸ்ரீட்ஹற்ழ்ா்ய்ண்ஸ்ரீள் என்ற 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அதற்கு மேல், ரண்ழ்ங்ம்ஹய் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாதம் ரூ.750 உதவித் தொகை, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் மாதம் ரூ.1000, சஐஙஐ பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பேருந்து பயண அட்டை, மூடுகாலணி ஆகியவை தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும், சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ, நேரடியாகவோ திருவொற்றியூா் ஐடிஐ-இல் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவங்களுக்கு 95668 91187, 88380 33826, 93446 09342, 89460 17811 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி அரசு ஐடிஐ-யில் மாணவா்கள் நேரடி சோ்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐகளில் நேரடி சோ்க்கை: ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

‘அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி சோ்க்கை’

தூத்துக்குடி அருகே ஜூன் 21இல் மாவட்ட செஸ் போட்டி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



