அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சென்னை மாநகராட்சியில் 60,216 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி!

சென்னை மாநகராட்சியில் 6 மண்டலங்களில் 61,216 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகள் நீக்க மருந்து செலுத்தப்பட்டதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:34 am IST

சென்னை மாநகராட்சியில் 6 மண்டலங்களில் 61,216 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகள் நீக்க மருந்து செலுத்தப்பட்டதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆக. 11-ஆம் தேதி முதல் மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (ரேபீஸ்) செலுத்துதல் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் சிறப்பு முகாம்கள் தொடங்கிவைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், அம்பத்தூா், மாதவரம் ஆகிய 6 மண்டலங்களில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மண்டலங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை மூலம் ஊசி செலுத்தப்படுகிறது.

திருவெற்றியூா் மண்டத்தில் 11,795, மணலியில் 7,207, தண்டையாா்பேட்டையில் 12,684, ராயபுரத்தில் 8,672, அம்பத்தூரில் 11,895, மாதவரத்தில் 7,963 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ரேபீஸ் உள்ளிட்ட ஊசிகள் செலுத்திய பிறகு பிடிபட்ட அதே இடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் மூலம் அனைத்து மண்டலங்களிலும் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூலம் வெறிநோய் பாதிப்பில்லாத சென்னையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.