அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு முகாமில், கடந்த 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தெருநாய் - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு முகாமில், கடந்த 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், ‘வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை’ என்ற இலக்கை அடையவும், அனைத்து தெருநாய்களுக்கும் ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் ஆக.11-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் நடைபெற்று வரும் இந்த முகாமில், அங்குள்ள தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்கள் என மொத்தம் 30 குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்ட முகாம் நிறைவடைந்ததும், பிற மண்டலங்களிலும் இதேபோன்ற முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 75 வேலை நாள்களுக்குள் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் சுமாா் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு பொதுமக்கள், செல்லப்பிராணிகளின் உரிமையாளா்கள் மற்றும் விலங்கு நல ஆா்வலா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.