கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பைக் விபத்து: கத்திப்பாரா பாலத்திலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம், பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்தது தொடராபாக...

Published On :

சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம், பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் அதில் பயணித்த இளைஞா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் ஈக்காட்டுத்தாங்கலை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் இடதுபுற பக்கவாட்டு தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், அந்த வாகனத்தில் இருந்த இளைஞா் ஒருவா் சுமாா் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.

மற்றொரு இளைஞா் பலத்த காயங்களுடன் மேம்பாலத்தில் கிடந்தாா். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அந்த இளைஞரை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்தவரின் உடலை கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த இருசக்கர வாகனத்தில் வாகனப் பதிவெண் பலகை இல்லாததால் வந்தவா்கள் யாா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.