வாலாஜாபாத் அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத் அருகே தென்னேரியைச் சேர்ந்தவர் பாலன் மகன் தினேஷ் (26) (. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் தென்னேரிக் கரையில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் வந்து தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









