காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் முதல் தளத்தில் உள்ள அறிவொளி இயக்க அலுவலக அறையில் நண்பகல் 12 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பெருநகராட்சி ஊழியர்களே முயற்சி எடுத்து, சில மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
இருப்பினும், தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அவ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
தொடர்ந்து, பெருநகராட்சி ஆணையர் சர்தார் அறிவொளி இயக்க அலுவலக அறையை நேரில் பார்வை, ஆய்வு செய்தார்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை ஆரம்பத்திலேயே அணைத்து விட்டதால், பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இவ்விபத்தில், முக்கிய ஆவணங்கள் ஏதும் எரியவில்லை என பெருநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

