வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சியில் பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்ட விவகாரத்தை முன்வைத்து, வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அண்மையில் போராட்டங்களை நடத்தினர். அவற்றில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்களுக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, பெரிய காஞ்சிபுரம் பெரியார் சிலை முன்பிருந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச்செயலர் பாரதி அண்ணா தலைமையில் திரளானோர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அப்போது, நெல்லுக்காரத் தெருவுக்கு வந்தபோது போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 'வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உறுதியான சட்ட நடவடிக்கை எடுத்து, அரசியல் சாசனத்தில் சேர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
ஜாதி, மதக் கலவரங்களை மத்திய அரசு தூண்டுவதாகக் கூறி அதைக் கண்டித்தும், வடமாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பி தடுப்புகளை முற்றுகையிட்டனர்.
அப்போது, டிஎஸ்பி முகிலன் தலைமையில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட திரளான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். பின்பு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

