விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பதவியை நிரப்பக் கோரிக்கை

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பதவியை நிரப்புமாறு கல்வித் துறையைச்

Updated On :26 டிசம்பர் 2018, 3:14 am IST


அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பதவியை நிரப்புமாறு கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 105 நடுநிலைப்பள்ளிகளும், தொடக்கப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1, 2 என இரு அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1-இல் தற்சமயம் ஷகிலா என்பவர் பணியாற்றி வருகிறார். 
கடந்த 8 மாதங்களுக்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்-2 பதவியில் இருந்த ஜெய்சங்கர் உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவருக்குப் பின் இதுவரை அந்தப் பணியிடத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. காலியாக உள்ள அப்பணியை நிரப்பாததால், பள்ளி மாணவர்களின் திறன், பள்ளிகளின் நிர்வாகப் பணிகள், ஆசிரியர்களின் பணிகள், பள்ளிகளின்ஆய்வுப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார கல்வி அலுவலர் நிலை-1 பணியில் உள்ள ஷகிலா தனது உடல்நிலை மற்றும் அவசரத் தேவைக்காக விடுப்பு எடுக்கும் காலங்களில் தமது பள்ளிகளின் தகவல்கள், விடுப்புகள், பணப்பலன் போன்ற அனைத்து பணிகளும் தொய்வு ஏற்படுகிற நிலை உள்ளது. 
எனவே 8 மாதங்களாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பணியிடத்தை நிரப்பி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன்களைப் பேணுமாறு கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.