முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாள் விழா காஞ்சிபுரம், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம், பூக்கடைச்சத்திரம், சின்ன காஞ்சிபுரம், ஆதிசங்கரர் நகர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலர் தூவி, தீபாராதனை காண்பித்து பாஜகவினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாஜக நகர தலைவர் ஜெகதீசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் செய்யப்பட்டது.
இதனிடையே, உத்தரமேரூர் பஜார் வீதியில் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளியோருக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், பாஜக நகர தலைவர் பிரேம்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்






