இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பிரேமா கூறுகையில், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பேருராட்சியில், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பெறுவதற்காக இரண்டு சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேகரிப்பு மையங்களில் 250 கிராம் அளவிற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.