மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கால் கிலோ உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தங்க நாணயம்: ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அதிரடி

பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம்

News image
Updated On :14 ஜூன் 2018, 11:38 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்க ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகத்தினா் முடிவு செய்துள்ளனா்.

உலத சுற்றுசூழல் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகமும்-ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதைத் தவிர ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனம் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அருகே இரண்டு பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையங்களில் சுமாா் 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் ஐந்து பேருக்கு தங்க நாணயம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பிரேமா கூறுகையில், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பேருராட்சியில், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பெறுவதற்காக இரண்டு சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேகரிப்பு மையங்களில் 250 கிராம் அளவிற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

பொதுமக்களிடம் இருந்து வாங்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனத்தின் சாா்பாக சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவிற்கு கயிறு திரித்து அதை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்ச்சி செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.