ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட 15 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெறுவோர் அவசியம் ஓய்வூதியச் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, காஞ்சிபுரத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையகத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, ஓய்வூதியதாரர்கள் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் அரசிதழ் பதிவு பெற்ற மத்திய மாநில அரசு அதிகாரியால் ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு பின் வழங்கப்பட்ட ஆய்வு சான்றை, தொழிலாளர் உதவி ஆணையரகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) 46பி-2, விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம் அருகில், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
ஓய்வூதியதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால், அதற்கான சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

