ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட 15 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெறுவோர் அவசியம் ஓய்வூதியச் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, காஞ்சிபுரத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையகத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, ஓய்வூதியதாரர்கள் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் அரசிதழ் பதிவு பெற்ற மத்திய மாநில அரசு அதிகாரியால் ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு பின் வழங்கப்பட்ட ஆய்வு சான்றை, தொழிலாளர் உதவி ஆணையரகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) 46பி-2, விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம் அருகில், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
ஓய்வூதியதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால், அதற்கான சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

