மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அறிவிப்புப் பலகைகள் இல்லாமல் சாலை விரிவாக்கப் பணி: விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டுநர்கள்

ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி உமிழ்வான்கள் வைக்காததால் வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். 
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ. 7.68 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.நெரிசலைக் கட்டுப்படுத்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் இருந்து பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு இருவழிச் சாலையில் இருந்து நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இச்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. 
சாலை விரிவாக்கத்திற்காக அறிவிப்புப் பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் ஏதும் வைக்கப்படாமல் சாலைத் தடுப்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் வைக்குமாறும், சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.