மதுராந்தகம் ரயில் நிலையத்தில் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தென்மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் செல்லும் விரைவு ரயில்கள் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நில்லாமல் செல்வது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் 7-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்வது வழக்கம். அதனால் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு போன்ற நகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவர்களும் எளிதில் செல்ல முடிந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக இங்கு முத்துநகர் விரைவு ரயில்,புதுச்சேரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், பாசஞ்சர் ரயில் போன்றவை நின்று செல்வதில்லை. இதுகுறித்து அறிந்த எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வியாழக்கிழமை காலை ரயில் நிலையத்துக்கு வந்து பயணிகளிடம் குறைகளைக் கேட்டார். பயணிகள் இங்கு இதுவரை நின்று சென்ற ரயில்கள் தொடர்ந்து நின்று செல்லவும், கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த எம்எல்ஏ, வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு ரயில் பயணிகள் அனைவரும் வந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க மதுராந்தகம் தனியார் மண்டபத்திற்கு வரும்படியும், அதன்பிறகு உங்களது கருத்துகளை திமுக எம்.பி.க்கள் மூலம் தில்லியில் ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்து உடனடி தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

