எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொதுத்தேர்வுகளுக்கு 898 மையங்கள்: ஆட்சியர் தகவல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 898 மையங்களில் நடைபெற உள்ளன என்று ஆட்சியர்  புதன்கிழமை தெரிவித்தார். 

Updated On :14 பிப்ரவரி 2019, 3:13 am IST


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 898 மையங்களில் நடைபெற உள்ளன என்று ஆட்சியர்  புதன்கிழமை தெரிவித்தார். 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கூறியது: 
நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதன்படி, இம்மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மொத்தம் 55,063 பேர். இதில், மாணவர்கள் 28,580 பேரும், மாணவியர் 26,483 பேரும் அடங்குவர். அதுபோல், 11-ஆம் வகுப்பு தேர்வெழுதுவோர் மொத்தம்  45,150 பேர் உள்ளனர்.  இதில் மாணவர்கள் 20,355 பேரும், மாணவியர் 24,795 பேரும் அடங்குவர்.  
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோர் மொத்தம் 47,073 பேர் உள்ளனர்.  இதில் மாணவர்கள் 21,733 பேரும், மாணவியர் 25,340 பேரும் அடங்குவர். இவர்கள் தேர்வெழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 898 தேர்வு மையங்கள் உள்ளன. 
இக்கூட்டத்தில், பொதுத்தேர்வை சிறப்பாக நடத்தி முடித்தல், இதில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, இதர வசதிகள் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய முறையில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.  
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசிய ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.