நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்புகள் மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:46 am IST

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்புகள் மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை 
நிறைவுபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தூயகொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட 4 நாள் பயிற்சி முகாமில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர் ஒன்றியங்களைச் சேர்ந்த  89 பள்ளிகளில் இருந்து 89 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.  இதில், வகுப்பறை செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் தலைமைப் பண்புகளை வளர்த்தல், சமுதாய நலனில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ், இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் வட்டார மேற்பார்வையாளர் அமலா பிரஜித்,  மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், வட்டாரப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எச். தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.