குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில்

News image
Updated On :24 ஜனவரி 2019, 3:27 am IST


மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி சூளேரிகாட்டு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்பட்டு வருகிறது. இது தென்சென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த ஆலையை 7 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்து குடிநீர் விநியோகிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த ஆலையில் கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 10 மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுவனம் சரிவர ஊதியம் வழங்கவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை பணிக்குச் செல்லாமல் குடிநீர் ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து குடிநீர் ஆலையின் தொழில்நுட்பப் பிரிவில் பாதிப்பு இருந்தும், வழக்கம்போல் ஆலையில் இருந்து தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.