மதுராந்தகத்தை அடுத்த தபால்மேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் இறந்தார்.
தபால்மேடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மனைவி தனபாக்கியம் (74). அவர் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, தனது மகன் வீட்டுக்குச் சென்றார். அதன் பின் தன் வீட்டுக்கு வருவதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து, இறந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல், வேகமாகச் சென்று விட்டார்.
இது தொடர்பாக படாளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இந்த விபத்தை ஏற்படுத்திய காரை தொழுபேடு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


