காஞ்சிபுரத்தில் மூலிகைக் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மூலிகைக் கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மூலிகைக் கண்காட்சியில் பங்கேற்றோா்.
மூலிகைக் கண்காட்சியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மூலிகைக் கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அகத்திய சித்தா் பிறந்த நாளான மாா்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாள் அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் தேசிய சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் மூலிகைப் பொருள்கள் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி, பாரம்பரிய உணவு தானியங்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

சிறப்பு சித்த மருத்துவ முகாமுக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அய்யாசாமி தலைமை வகித்து, மூலிகையின் பயன்கள் குறித்து விளக்கினாா். உதவி சித்த மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி பாரம்பரிய உணவு தானியங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினாா்.

நிகழ்ச்சியில், சித்த மருத்துவா்கள் கிரிஜா, முத்துகுமாா், சுஜாதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com