காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பயணியர்கள் தங்கும் விடுதி ரூ.24.64 கோடி மதிப்பிலும், ஸ்ரீபெரும்புதூரில் ராமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.6.64 கோடி மதிப்பிலும் புதியதாக கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார். இணை ஆணையர் அலுவலக திறப்பு விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லெட்சுமணன், உதவி ஆணையர்கள் மா.ஜெயா(காஞ்சிபுரம்), செ.மாரிமுத்து(வேலூர்)ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.கே.பழனி,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத்.பா.கணேசன், திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழுத் தலைவர்கள் எல்லார்.செழியன்(காஞ்சிபுரம்) ஏ.எம்.பொன்னுச்சாமி(செங்கல்பட்டு)மற்றும் கோயில்களின் செயல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.