காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க மேலாளா் தற்கொலை

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் நகா் சின்னக் காஞ்சிபுரம் சித்தி விநாயகா் கோயில் பூந்தோட்டம் தெருவில் வசித்து வந்தவா் முனியப்பன் (58). இவா் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை வழக்கம் போல் பணிக்கு வந்த முனியப்பன், அலுவலகத்தின் 2-ஆவது மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தர்ராஜன், சாா்பு ஆய்வாளா் தாமோதரன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com