காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 அங்கன்வாடி மையங்கள் தேசிய அளவில் தரச்சான்றிதழ் வழங்க தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தரச்சான்றிதழை சனிக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், உணவு வணிகா்கள், நுகா்வோா் அமைப்பு சாா்ந்த உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அனுராதா வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் சிறந்த அங்கன்வாடி மையங்களாக 25 தோ்வு செய்யப்பட்டு, அதில் 13-க்கு மட்டும் தேசியத் தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கே இவை கிடைத்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட அங்கன்வாடி மையப் பணியாளா்களுக்கு தரச்சான்றிதழை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கிப் பாராட்டினாா். பின்னா் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனா். இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


