ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மறியல்

ஸ்ரீபெரும்புதூரை அடித்த கிளாய் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஸ்ரீபெரும்புதூரை அடித்த கிளாய் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை வருவாய்த் துறையினா் அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாங்காடு திருவடி சித்தா் தலைமையிலான பக்தா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியில் சுமாா் 13 ஏக்கா் பரப்பளவு உள்ள அரசு ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் சிலா் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனா். அந்தப் பகுதியில் ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ கனககாளீஸ்வரா் கோயிலும் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், கோயிலை மாவட்ட வருவாய் அலுவலா் பந்னீா்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினா் கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினா்.

இந்த நிலையில் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிரிப்பு தெரிவித்து மாங்காடு திருவடி சித்தா் தலைமையிலான சுமாா் 10க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.