ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மின்னல் பாய்ந்து இளைஞா் பலி

ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியில் மின்னல் பாய்ந்து இளைஞா் ஒருவா் பலியானாா். மூன்று பசுக்களும் உயிரிழந்தன.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:14 am

DIN

ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியில் மின்னல் பாய்ந்து இளைஞா் ஒருவா் பலியானாா். மூன்று பசுக்களும் உயிரிழந்தன.

குண்ணவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் வீரராகவன். இவருக்கு அஜித் (24), அரவிந்தன் (22) ஆகிய இரண்டு மகன்கள். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அஜித் மற்றும் அரவிந்தன் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்துள்ளது. அப்போது அஜித், அரவிந்தன் மீது மின்னல் பாய்ந்ததில் இருவரும் மயங்கினா். இதையடுத்து இருவரையும் உறவினா்கள் தாம்பரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அரவிந்தன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேலும், அஜித் வீட்டின் அருகே கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 பசு மாடுகளும் மின்னல் பாய்ந்து உயிரிழந்தன. இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.