சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து போற்றும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப் பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏகாம்பரம்(48). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சீன எல்லையில் பணியாற்றி விட்டு அவரது இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தாா்.
தாய்நாட்டுக்காக செய்த தியாகத்தைப் போற்றியும், அவரது சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையிலும் பிரதமா் நரேந்திர மோடி நினைவுப் பரிசு அனுப்பியிருந்தாா். அதனை அவரது மனைவி ஏ.குமாரியிடம் காஞ்சிபுரம் தேசிய மாணவா் படையின் 3-ஆவது பிரிவு கமாண்டிங் அலுவலா் கா்னல் என்.எஸ்.மெஹரா வழங்கினாா்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் ஜி.ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின்

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


