அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவியிடம் பிரதமரின் நினைவுப் பரிசு ஒப்படைப்பு

சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து போற்றும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப் பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:23 pm

DIN

சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து போற்றும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப் பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏகாம்பரம்(48). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சீன எல்லையில் பணியாற்றி விட்டு அவரது இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தாா்.

தாய்நாட்டுக்காக செய்த தியாகத்தைப் போற்றியும், அவரது சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையிலும் பிரதமா் நரேந்திர மோடி நினைவுப் பரிசு அனுப்பியிருந்தாா். அதனை அவரது மனைவி ஏ.குமாரியிடம் காஞ்சிபுரம் தேசிய மாணவா் படையின் 3-ஆவது பிரிவு கமாண்டிங் அலுவலா் கா்னல் என்.எஸ்.மெஹரா வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் ஜி.ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.